வீட்டு பணிப்பெண் சித்ரவதை.. முகம், கைகளில் சூடு வைத்து கொடுமை ; திமுக எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 12:52 pm
Quick Share

சென்னை ; வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக திமுக எம்எல்ஏவின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 18 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை எம்எல்ஏவின் மருமகள் அடித்து துன்புறுத்தியதுடன், பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தி வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும், தினமும் வேலை செய்யச் சொல்லி அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்தார். இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

Views: - 227

0

0