உங்க தவறை சுட்டிக்காட்டாமல் தாலாட்டா பாட முடியும்..? தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ; திமுக மீது ஆர்பி உதயகுமார் ஆவேசம்..!

Author: Babu Lakshmanan
23 October 2023, 7:27 pm
Quick Share

எதிர்க்கட்சியை நீங்கள் அடக்கி விடலாம் என்று கருதினால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- சரஸ்வதி பூஜையான இன்று சரஸ்வதி தாயை நாம் வணங்கி புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் அறிவிக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலே நாம் இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைத்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, நேற்றைய தினத்தில் திருவண்ணாமலையிலே திருவாய் மலர்ந்திருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், நரம்பில்லாத நாக்கு நாவடக்கம் இல்லாமல் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்களை விமர்சித்துக் கொண்டு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தை அவர்களுடைய உளறல் பேச்சிலே நாம் அறிந்து கொள்ளலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் பேசியதை வயித்தெரிச்சல் என்று சொல்லுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இந்த நாட்டிலே நடைபெறுகிற அக்கிரமங்களை ஜனநாயக விரோதங்களை மக்கள் விரோத பற்றை தோலூரித்து காட்டுவது தான் எதிர்க்கட்சித் தலைவருடைய பிரதான முக்கியமான கடமை. சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்திருக்கிற முன்னாள் முதலமைச்சர் பாசமிகு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்களை நீங்கள் கணக்கீடு செய்யக்கூடாது.

எந்த ஒரு புதிய திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நீங்கள் சொல்லுகிற பதில் இந்த தாய் தமிழ்நாட்டு மக்களுக்காக வளர்ச்சி திட்டம், குறிப்பாக நாங்கள் உங்கள் தோல்வியை பட்டியலிடுகிறோம், உங்களுடைய தோல்வியை முதல்வராக தேர்வு வாக்குறுதிகளை 26 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் அதில் 10% மேலே உங்களால் நிறைவேற்ற முடியவில்லை திணறிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதில் உங்களுடைய முதல் தோல்வி சட்டமன்றத்திலே நீங்கள் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகள் எதையும் நீங்கள் நிறைவேற்றவில்லை, சட்டமன்றத்திலே நீங்கள் 110 தொகுதிகளில் வாக்குறுதிகள் கொடுத்தீர்கள். அதுமட்டுமல்ல மாநில தொகுதிகளில் கொடுத்த வாக்குறுதிகள், அதுமட்டுமல்ல நிதிநிலை அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதிகள், இப்படி எல்லா வாக்குறுதிகளும் நீங்கள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டீர்கள்.

ஆக கவர்னர் உங்களை நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிலை அறிக்கை, மானிய கோரிக்கை 110 விதிகள் 527 தேர்தல் வாக்குறுதிகள் நீங்கள் நிறைவேற்றுவதில்லை. அது மட்டுமல்ல சொன்னதை செய்வோம், சொல்லாததை செய்வோம் என்னும் விதிகள் சொன்ன எதையும் செய்யவில்லை, ஆனால் சொல்லாததை போன்று மின்சார கட்டணத்தை உயர்த்தியது, சொத்து வரிகளை உயர்த்தியது, குப்பை வரி உயர்ந்திருக்கிறது, பால் விலை உயர்ந்திருக்கிறது, விலைவாசி உயர்ந்திருக்கிறது, சட்ட ஒழுங்கு சீர் குழைந்திருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் சொல்லாததை இந்த தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிசாக தந்திருக்கிறீர்கள்.

இதில் வேதனையான விஷயம், புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் ஆட்சிக் காலத்திலே வேளாண் செழிக்க குடிமராமத்து திட்டம் என்கிற குடிநீர் பற்றாக்குறைந்த மக்களுடைய தாகத்தை தீர்ப்பதற்காக நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக, புரட்சி தமிழர் எடப்பாடி ஐயா அவர்கள் ஆட்சி காலத்திலேயே, குடிமராமத்து திட்டம் என்கிற ஒரு மகத்தான திட்டத்தை ஏறத்தாழ 5500 கோடிக்கு மேலே வரவேற்பை நிறைவேற்றினார்கள்.

அந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டீர்கள். புரட்சித்தலைவி அம்மாவின் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டத்தை நீங்கள் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக புதுமைப்பெண் திட்டத்தை திட்டம் என்று ஒரு புருடா விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் மக்களுக்கு மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.

இது பெண்களை ஊக்குவிப்பதற்காக பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், திருமணம் உதவி தொகை திட்டத்தை ஒரு பவுன் தங்கத்தோடு, அந்த திருமணத்தில் வழங்கும்போது, உற்றார், உறவினர் சுற்றத்தார் யார் கைவிட்டாலும், தாய் விட்டு சீதனமாக புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அரசு வழங்கியது. அதேபோல, மாணவர் செல்வங்களுடைய கணினி அறிவை வளர்ப்பதற்கான மடிக்கணினி திட்டத்தை நீங்கள் ரத்து செய்து விட்டீர்கள், அம்மாவின் மினி மடிக்கணினி ஏழை எளிய சாமானிய மக்களுக்கான திட்டத்தையும் ரத்து செய்து விட்டீர்கள்.

இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்து விட்டீர்கள். அம்மா பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடுவோம் திட்டம் பசுமை புரட்சி திட்டம் அதையும் ரத்து செய்து விட்டீர்கள். அம்மா உணவு, அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என்று அம்மா உணவகத்தில் தொடங்கி அம்மா மருந்தகம் வரை அனைத்தையுமே நீங்கள் ரத்து செய்து விட்டீர்கள். இது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இதைத்தான் புரட்சித் தமிழர் எடப்பாடி ஐயா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இன்றைக்கு உங்களிடத்திலே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதை சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு உங்களுக்கு தாலாட்டு பாட முடியுமா? உங்களுக்கு வாழ்த்து பாட முடியுமா? அப்படி நீங்கள் இந்த தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா? இந்த தமிழ்நாட்டு மக்களே வாழ வைத்திருக்கிறீர்களா? அதை நரம்பில்லாத நாக்கு நீங்கள் அடக்கு முறையோட கையாள்வதாக இன்றைக்கு உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது.

எதிர்க்கட்சியை நீங்கள் அடக்கி விடலாம் என்று கருதினால் அது நிச்சயமாக பகல் கனவாகவே இருக்கும். நான்காண்டு காலம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்களை கேட்டீர்கள், நீங்கள் அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்தீர்களா என்று எங்களுக்கு தெரியாது. கும்பகர்ணன் தூக்கத்தில் வேண்டுமானால் நீங்கள் இருந்திருக்கலாம் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டங்களை நீங்கள் சொல்லாமல் இருந்திருக்கலாம். புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி அவர்களின் ஆட்சி காலத்திலே நான்காண்டு ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவை எதிர்கொண்டது.

வளர்ச்சியை எதிர்கொண்டது, இதிலே வெள்ளத்தை எதிர்கொண்டது சாதனை முத்திரை பதித்துள்ளது இதையெல்லாம், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அரசின் காழ்புணர்ச்சியோடு வாக்குறுதிகளுக்காக விமர்சனம் செய்திருக்கலாம்.11 அரசு மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவுக்கே வழிகாட்டி கொண்டு வந்திருக்கிறார்கள்.

மருத்துவ மாணவ கனவை நிறைவேற்றுவதற்காக 7.5% இட ஒதுக்கீடை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்காக சமூக நீதிக்காக கொண்டு வந்தார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்தார்கள் ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கினார்கள். அதைப் போன்று புதிய பேருந்துகளை மக்கள் வசதிக்காக கொண்டு வந்தார்கள்.

புதிய வட்டங்கள் கோட்டங்கள் கொண்டு வந்தார்கள். அதேபோல புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கிய ஆடு மாடு பசு கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து வெண்மை புரட்சியை உருவாக்கினார்கள். அதேபோன்று உணவு உற்பத்தியிலே ஐந்து முறை மத்திய அரசினுடைய கிரிஷிகர்மான் விருதை பெற்றுக் கொடுத்தார்கள். 50 ஆண்டுகால காவிரி உரிமையை மீட்டெடுத்து தந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்காற்று 22 நாட்கள் முடக்கி தமிழ்நாட்டினுடைய ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து கொடுத்தார்கள்.

உங்களைப் போன்று இன்றைக்கு காவிரியில் தண்ணீரை பெற முடியாமல் உரிமையை காவுக்கொடுத்து அடகு வைத்தவர் எங்கள் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள், எட்டு கோடி தமிழர்களுடைய ஒரே நம்பிக்கையாக இன்றைய அரசியலிலே விஸ்வரூபமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் ஒரு ஒப்பிட்டை பார்க்க வேண்டும் நீங்கள் உங்கள் அரசியலில் வளர்ந்திருப்பதும் உங்கள் தந்தையாரின் அரசியல் பின்புறத்திலே பாதுகாப்பிலே உங்கள் அரசியலில் அடி எடுத்து வைத்து அரசியலில் இன்றைக்கு நீங்கள் உங்கள் உழைப்பால் வளர்ந்திருப்பதாக நீங்கள் இன்றைக்கு சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காற்றாற்று வெள்ளத்தைப் போல எந்த ஒரு அரசியல் பின்புறமும் இல்லாத ஒரு விவசாயி எளிய குடும்பத்திலே பிறந்து, இரவு பகல் பாராமல் எனது அயராத உழைப்பால் அரை நூற்றாண்டு காலம் இந்த தமிழ்நாட்டு மக்களுக்காக சேவை செய்து உழைத்து, உழைத்து, உழைத்து இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்திலே இன்றைக்கு இமயமலையாக உயர்ந்து, 8 கோடி தமிழக மக்களுக்கு ஒரே நம்பிக்கையாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாத உங்களுக்குதான் வயித்தெரிச்சலில் வாய்க்கு வந்ததை நரம்பில்லாத நாக்கிலே நீங்கள் பேசி இருப்பதை இன்றைக்கு மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. உங்கள் உளறல் வயிற்றெரிச்சலை பட்டு வட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. அதற்கு புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் தினந்தோறும் கண்டன அறிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

உங்களுடைய செயல்படாத தன்மையை உங்கள் மக்கள் விரோத போக்கை, உங்கள் ஜனநாயக விரோத போக்கை, நீங்கள் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருப்பதை தட்டி எழுப்பி சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். போதை மாநிலமாக தமிழக மாறிவிட்டது. அதையெல்லாம் சீர் செய்ய வேண்டும். செம்மைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது. இதுதான் புரட்சித் தமிழர் எடப்பாடி ஐயா எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்றைக்கு இலக்கணமாக முதலமைச்சராக இருந்தபோது, முதலமைச்சருக்குரிய இலக்கணத்தோடு, அவர் இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக இத்தனை திட்டங்களை அவர்கள் பெற்றுக் கொடுத்தார்கள்.

இன்றைக்கு அனைத்து கட்டமைப்புகளையும் இந்த தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்டமைப்புகளையும் புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி அவர்கள் சாலைகளாக இருக்கட்டும், மேம்பாலங்களாக இருக்கட்டும் கட்டிடங்களாக இருக்கட்டும், மருத்துவமனை கட்டிடங்களாக இருக்கட்டும், பள்ளிக் கட்டிடங்களாக இருக்கட்டும், அனைத்தையும் கொண்டு வந்தவர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் ஆகும். ஆகவே நீங்கள் பாதுகாப்பான அந்த அரசியல் பயணத்திலே வந்தவர் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள் காற்றாற்று வெள்ளத்திலே நெருப்பாற்றிலே நீந்தி மக்கள் பணியாற்றி எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும், தடைகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து தன்னோட உழைப்பால் தியாகத்தால் தன்னுடைய கருணையால் தன்னுடைய தாயுள்ளம் கொண்ட தெய்வ உள்ளம் கொண்ட அனைவரையும் அரவணைத்து, இன்றைக்கு 8 கோடி தமிழர்களுடைய நம்பிக்கை நாயகனாக புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி அவர்கள் விளங்குவதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அவர்களுடைய விஸ்வரூப அரசியல் வளர்ச்சி அவர்கள் அரசியல் செல்வாக்கு வளர்ச்சி அவர்கள் மக்கள் செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்வதை அவர் எடுக்கக்கூடிய ஒவ்வொரு விஷயமும் அவருக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்தி கொண்டே செல்கிறது இன்றைக்கு அவர் தனித்தன்மையோடு மன உறுதியோடு கொள்கை காக்க கொள்கை சிங்கமாக களத்திலே நின்று தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக மக்கள் பணியாற்றிக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்

அதனால் அவருக்கு ஒவ்வொரு நாளும் மக்கள் செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வயித்தெரிச்சலிலே வாய்க்கு வந்தபடி உளறுகிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இது போல் பேசுவது உங்களுக்கு அழகல்ல. ஆகவே இந்த பேச்சை நீங்கள் தொடருவேன் ஆனால் ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டரை கோடி தொண்டர்களும் உயிர்த்தெழுவார்கள். இன்றைக்கு 8 கோடி தமிழர்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உங்களுடைய லட்சணம் இதுதான். உங்கள் தகுதி இதுதான். உங்கள் அரசியல் நாகரிகம் இதுதான். உங்கள் அரசியல் பண்பு இதுதான். என்பதை இன்றைக்கு உங்கள் பேச்சின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார்கள், ஆகவே இதற்கு தமிழக மக்கள் உங்களுக்கு தங்கள் தக்க பாடம் இந்த தேர்தலிலே அளிப்பார்கள் நிச்சயமாக தீர்ப்பளிப்பார்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 271

0

0