மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த மாணவன்… காரணத்தை கேட்டு அதிர்ந்து போன நண்பர்கள்!!

Author: Babu Lakshmanan
2 February 2023, 8:55 pm
Quick Share

பீகார் : தேர்வு எழுத சென்ற மாணவன் மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இண்டர் மீடியர் தேர்வு எழுதுவதற்காக பிளஸ் 2 படிக்கும் மாணவன் மணி சங்கர் என்பவர் சென்றிருந்தார். அங்கு 50 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். 50 மாணவிகளுக்கு மத்தியில், மாணவர் மணி சங்கர் தான் ஒரே ஒரு மாணவராக அமர வைக்கப்பட்டார். இதை அறிந்ததும் அவருக்கு வியர்வை கொட்டியது. பதற்றத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவர் மயங்கி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவரை அவரது அத்தை மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்ளும் நிலையில், ஏன் தேர்வு மையத்தில் அப்படி பதறிப்போனாய், தேர்விற்கு ஒழுங்காகப் படிக்கவில்லையா என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த மாணவர் கூறிய காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த தேர்வு மைய அறையில் மாணவர் சங்கர் மட்டுமே ஆண் எனவும், மீதம் இருந்த 500 பேருமே மாணவிகள் என்பதாலும் தனக்குப் பதட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிளே பாய்களாக 2k கிட்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், 50 மாணவிகளுக்கு மத்தியில் அமர்ந்த மாணவன் மயங்கி விழுந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 289

0

0