பேச்சுவார்த்தையில் உடன்பாடு… பாஜக கூட்டணியில் ஐக்கியமான சரத்குமார்… எம்பி தேர்தலில் போட்டியா..?

Author: Babu Lakshmanan
6 March 2024, 4:41 pm
Quick Share

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்‌ பாரதிய ஜனதா கட்‌சியுடன்‌ அகில இந்திய சமத்துவ மக்கள்‌ கட்சி‌ கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பாரதிய ஜனதா கட்சியின்‌ தமிழக பொறுப்பாளர்‌ அரவிந்த்‌ மேனன்‌ அவர்கள்‌ பிப்ரவரி 28 ஆம்‌ தேதி என்னை நேரில்‌ சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில்‌ பாரதிய ஜனதா கட்சியுடன்‌ அகில இந்திய சமத்துவ மக்கள்‌ கட்‌சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்‌.

அதில்‌ ஒருமித்த கருத்துகள்‌ உடன்பட்டதால்‌ நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர்‌ முருகன்‌ அவர்கள்‌, தேசிய செயலாளர்‌ மற்றும்‌ முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எச்.ராஜா அவர்கள்‌, பாஜக தமிழக பொறுப்பாளர்‌ மற்றும்‌ தேசியச்‌ செயலாளர்‌ இரு.அரவிந்த்மேனன்‌ அவர்கள்‌ ஆகிய மூவரும்‌ குழுவாக வந்து என்னை சந்‌தித்து கூட்டணி குறித்து மீண்டும்‌ பேசினார்கள்‌.

இரண்டாம்‌ கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது. அதில் இந்திய சமத்துவ மக்கள்‌ கட்சியின்‌ உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள்‌ மற்றும்‌ மாவட்டச்‌ செயலாளர்கள்‌ ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத்‌ தேர்தலில்‌ முடிவெடுக்கும்‌ அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும்‌ முழூவுக்கு கட்டுப்படுவோம்‌ என்று உத்தரவாதம்‌ அளித்ததன்‌ அடிப்படையில்‌, நாடு வளம்‌ பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும்‌ நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்‌ பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன்‌ இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்‌. மற்ற விபரங்களை இன்னும்‌ ஒரு வார காலத்திற்குள்‌ தெரிவிக்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சமத்துவ மக்கள் கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஒரு சீட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அந்த தொகுதியில் சரத்குமார் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Views: - 145

0

0