மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க.. அவங்க தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 6:46 pm
CM
Quick Share

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க.. அவங்க தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் தமிழக மீனவர்களை மீட்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 195

0

0