தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!
14 August 2020, 1:15 pmசென்னை : டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு விடுமுறை வருவதால், மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோத உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 7வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதிலும், 2வது மாதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 3வது ஞாயிற்றுக்கிழமையான நாளை மறுநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட இருக்கின்றன.
குறிப்பாக, டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால், சனிக்கிழமைகளிலேயே தேவையான அளவு மதுபாட்டில்களை குடிமகன்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், நாளைய தினம் நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எது எப்படியோ, அரசுக்கு ‘நல்லா கல்லா கட்ட’ப் போகிறது.