தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது : இன்றைய கொரோனா நிலவரம் தெரியுமா..?
22 September 2020, 6:21 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,337 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 8,947 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,406 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 97 ஆயிரத்து 377ஆக அதிகரித்துள்ளது.