‘இன்னும் 10 வருஷம் தான்…சீமைக்கருவேல மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்’: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!!

Author: Rajesh
4 April 2022, 9:26 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் சதீஷ்குமார், பாதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

தற்போது சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம்.

தமிழ்நாட்டில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழகஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர்.

Views: - 615

0

0