விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்.. எதிர்த்த பாஜகவின் பாசறைக்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜோதிமணி காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 7:18 pm
Jothi
Quick Share

விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்.. எதிர்த்த பாஜகவின் பாசறைக்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜோதிமணி காட்டம்!

விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.

விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது.
பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கொந்தளித்துள்ளார்.

Views: - 80

0

0