வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியினை ஆட்சியர் ஆய்வு
21 September 2020, 8:23 pmவிருதுநகர்: விருதுநகரில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் பணிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகரில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் தற்போது விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பலத்த பாதுகாப்புடன் சீல்யிடப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது
இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் பணிக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில்,
விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை மேற்பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டனர்