ஆதரவற்ற பிச்சைகாரர்களுக்குள் தகராறு:மற்றொரு ஆதரவற்ற பிச்சைக்காரர் தப்பி ஓட்டம்
Author: kavin kumar6 November 2021, 1:52 pm
வேலூர்: காட்பாடியில் காவல்நிலையம் அருகில் ஆதரவற்ற பிச்சைகாரர்களுக்குள் ஏற்பட்டதகராறில் ஆதரவற்ற முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மற்றொரு பிச்சைக்காரரை தேடி வருகின்றனர்
வேலூர் மாவட்டம்,காட்பாடி காவல்நிலையம் எதிரில் பேருந்து நிறுத்தம் உள்ளது இங்கு ஆதரவற்ற முதியவர்கள் பிச்சைகாரர்களும் பிச்சை எடுத்து உண்டு தங்கி வந்தனர் இந்த நிலையில் தற்போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு பிச்சைகாரருக்கும் மற்றொரு ஆதரவற்ற பிச்சைகாரருக்கும் ஏற்பட்ட தகராறில் 50 வயது ஆதரவற்ற பிச்சைகாரர் மற்றொரு பிச்சைக்காரர் கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் காவல்நிலை அருகில் நடந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இறந்தவர் யார் என காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருவதுடன் இறந்த முதியவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மற்றொரு பிச்சைக்காரரை தேடி வருகின்றனர்
0
0