அட்டைப் பெட்டிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு!!சீறிப் பாய்ந்தது!!
8 September 2020, 3:48 pmஈரோடு : சத்தியமங்கலம் அருகே ஜேசிபி இயந்திரம் பழுது பார்க்கும் பணிமனையில் உள்ள அட்டைப் பெட்டிக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் ஜேசிபி இயந்திரம் பழுது பார்க்கும் பணிமனை அமைந்துள்ளது . அங்கு வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிக்குள் பாம்பு ஒன்று புகுந்து பதுங்கி விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அட்டைப் பெட்டிக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அங்கு இருந்த நபர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
0
0