வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்…
Author: kavin kumar11 October 2021, 2:28 pm
சென்னை: வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை வியாசர்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் , வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் மார்க்கெட் அருகே எம்.கே.பி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரொருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் வயது 21 என்பதும் இவர் ஆந்திரா விலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வசந்த குமார் மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0