புதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு…
11 August 2020, 6:54 pmபுதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 276 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தாக்கம் வேகமாக உள்ளது. தொடக்கத்தில் குறைவானது போன்று காணப்பட்டாலும் இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 276 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 241 பேருக்கும், காரைக்காலில் 30 நபர்களும், ஏனாமில் 5 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,900ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,532 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.