சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
29 September 2020, 8:57 pmஈரோடு: சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதோடு சில நேரங்களில் அவ்வப்போது வெயிலும் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் லேசான வெயில் காணப்பட்டது. மாலை லேசான சாரலுடன் பெய்ய துவங்கிய மழை திடீரென கன மழையாக மாறியது சுமார் ஒரு மணிநேரம் இடியுடன் கூடிய பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்