பணி நிரந்தரம் செய்ய கோரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா
21 January 2021, 3:31 pmபுதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய கோரி 70க்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் இரண்டாவது நாளாக பேருந்துகளை இயக்க விடாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த 10ஆண்டுக்கு மேலாக 270க்கு மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 33 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அரசு இதுவரை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் 70க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்த நிறுத்தி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக பேருந்து இயக்காத காரணத்தால் கிராமப்புறங்களுக்கும் செல்லும் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை பேருந்துகளை இயக்க விடமாட்டோம் என ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
0
0