கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
17 September 2020, 9:57 pmதிருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி திரியாலம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட திரியாலம் ஊராட்சி பூசனைக்காய் வட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சுரேஷின் மகன் சனீஸ் என்ற வயது(5) சிறுவன் அவர்களுக்கு சொந்தமான இந்த கிணற்றில் மீன் இறந்து கிடப்பதாக கிணற்றை எட்டி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தீடீரென சிறுவன் நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்து உள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.