தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்: கொலையா? தற்கொலையா?…தீவிர விசாரணை..!!
Author: Aarthi Sivakumar6 January 2022, 7:18 pm
கோவை: கோவை அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த நிலையில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை- இருகூர் ரயில்வே தண்டவாளம் பீளமேடு அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே சப்&-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை சோதனை செய்தனர்.
பின்னர் அந்த ஆணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ஆண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0