நான் டிரஸ் மாத்துறத அந்த 5 பேரும் பார்த்தாங்க.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த தமிழும் சரஸ்வதியும் நடிகை..!

Author: Vignesh
9 September 2023, 3:16 pm

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

Nakshathra Nagesh - updatenews360

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நக்ஷத்ரா ஒரு படத்தில் நடிக்கும் போது உடைமாற்றக் கூட இடம் இல்லை. என்னை ஒரு கேரவனின் சென்று உடைமாற்ற சொன்னார்கள். அந்த கேரவேனில் விண்டே ஏதும் இல்லை. முன் புறத்தில் கண்ணாடி மட்டுமே இருக்கிறது. வேனுக்கு வெளியே ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். நான் உடை மாற்றுவது தெரிந்தும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு பெண் உடைமாற்றப் போகிறார் திரும்பி உட்கார வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை என்று நக்ஷத்ரா நாகேஷ் தெரிவித்து இருந்தார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்