இந்த ஃபேஷியல் மட்டும் போட்டா போதும்… உங்க சருமத்த பார்த்து நீங்களே அசந்து போய்டுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
10 February 2022, 3:34 pm
Quick Share

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கான தேடுதல் முடிவில்லாத ஒன்றாகும். ஆனால் பலவிதமான அழகு குறிப்புகள், தோல் பராமரிப்பு ஹேக்குகள், அழகு சாதன பொருட்கள் மற்றும் முகக் கருவிகள் ஆகியவற்றுடன், உங்கள் சருமத்திற்கு மிகவும் பயனளிக்கும் நடைமுறைகளில் இருந்து தேர்வு செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

ஆனால், நீங்கள் எப்போதாவது ஆயுர்வேத தோல் பராமரிப்பு மருந்துகளை முயற்சித்துள்ளீர்களா? ஆயுர்வேத தோல் பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வைத்தியம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோலுக்கு தங்க சுரங்கம் போன்றது.

இந்த வைத்தியம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்த பண்டைய ரத்தினங்களிலிருந்து அனைவரும் பயனடைய முடியும். இந்த பதிவில் ஒரு எளிய DIY ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். இந்த ஃபேஸ் பேக் உப்தான் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் சருமம் இழந்த பளபளப்பைப் புதுப்பிக்கவும், உள்ளிருந்து அதைச் சுத்தப்படுத்தவும் மற்றும் உங்கள் சருமத்தை இயற்கையாகப் பராமரிக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்:
* 3 டீஸ்பூன் – பாசிப்பருப்பு (மஞ்சள்)
* 2 டீஸ்பூன் – ஓட்ஸ்
* 3 டீஸ்பூன் – பச்சைப்பயறு
* 2 டீஸ்பூன் – துவரம் பருப்பு (சிவப்பு பருப்பு)
* பெருஞ்சீரகம் விதைகள்

முறை:
* கடாயை சூடாக்கி அதில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். குறைந்த தீயில் சிறிது கிளறி, பொருட்களில் இருந்து வாசனை வரும் வரை காத்திருக்கவும்.

*பருப்பு வெடிப்பதை கேட்கும் வரை காத்திருங்கள். பிறகு தீயை அணைத்து விட்டு அரைக்க வைக்கவும்.

*கலவை ஆறிய பிறகு பொடியாக அரைக்கவும்.

*உப்தானில் ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியைக் கலந்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

இதனை எப்படி உபயோகிப்பது?
ஒரு டீஸ்பூன் இயற்கை உப்தான், இரண்டு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் சருமத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவலாம்.

Views: - 936

0

0