பணம் தான் முக்கியம்.. பணத்திற்காக தான் இந்த தொழிலுக்கு வந்தேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
4 April 2024, 7:26 pm
tamil-actress
Quick Share

உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு.

priya bhavani shankar - updatenewse360

செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை.

priya bhavani shankar - updatenewse360

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

இப்போது அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள இவர்,இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

priya bhavani shankar

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படங்களில் நடிக்கவில்லை என்றும், பணம் சம்பாதிப்பதற்காக தான் இந்த தொழிலுக்கு வந்ததாகவும், படங்களில் நடித்ததாகவும், பணம்தான் முக்கியம். சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே, திரையுலகில் தங்களை நிரூபித்துக் கொள்ள நிறைய கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்காக இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து பேசிய பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த போட்டோ போட்டாலே அது கவர்ச்சி என்கிறார்கள். சுடிதார் போட்டாலும், கவர்ச்சி புடவை கட்டினாலும் கவர்ச்சி, நைட்டி போட்டாலும் கவர்ச்சி என்று சொன்னால் எப்படி ??? முதலில் கவர்ச்சி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், மேலும் இப்போதைக்கு தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 95

0

0