அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதல் கணவர்..? விவாகரத்து குறித்து ‘வெயில்’ பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
14 January 2023, 4:00 pm
priyanka nair - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு பிரியங்கா நாயர் வெயில் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவரது முதல் திரைப்படத்திலேயே இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்திய இவர், தமிழ் திரை மட்டுமல்லாமல் மலையளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

priyanka nair - updatenews360

பிரியங்கா நாயர் வெயில் திரைப்படத்தில் தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். வெயில் திரைப்படத்தை இயக்கியவர் வசந்தபாலன் அவர்கள் அந்த திரைப்படத்தை தயாரித்தவர் பிரபல இயக்குனரான ஷங்கர் அவர்கள் தயாரித்துள்ளார் பிரியங்கா நாயர் மலையாளத்தில் கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பின்பு திரைப்பட வாய்ப்புகள் தமிழில் குறைய பிரியங்கா நாயர் மலையாள பக்கம் தாவினார். நீண்ட நாள் கழித்து தற்போது தமிழில் ஒரு திரைப்படம் நடித்து வருகிறார். இவர் திரைப்படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

priyanka nair - updatenews360

நடிகைகள் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போது தனது ஹாட் போட்டோசூட் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம், அதே போல் தற்போது உற்றான் திரைப்படத்தில் ஆசிரியராக நடித்து வரும் பிரியங்கா நாயர் சில காட்சிகளில் அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

priyanka nair - updatenews360

பிரியங்கா நாயர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள திரை பக்கம் தவினார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நாயர் நடித்து இருந்தார்.

priyanka nair - updatenews360

தற்போது மீண்டும் பிரியங்கா நாயர் தமிழில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் திரைப்படமாகும். பிரியங்கா நாயர் தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, 2015ஆம் ஆண்டே அவரை விவாகரத்து செய்து விட்டு, பிரிந்து விட்டார்.

priyanka nair - updatenews360

இந்நிலையில், முதல்முறையாக தன்னுடைய கணவரை பிரிந்த காரணம் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா நாயர்.

இதுகுறித்து பிரியங்கா நாயர் கூறுகையில் தன்னுடைய கணவர் தனக்கே தெரியாமல் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், தன்னுடைய கணவர் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவரை மன்னிக்க முடியாமலும் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

priyanka nair - updatenews360

மேலும் திருமணத்திற்கு முன்பு தான் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்ட கணவர், பின் அதை மறுத்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள பிரியங்கா சிறந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் தன்னை ரசிகர்கள் பார்க்கலாம் என பிரியங்கா நாயர் தெரிவித்துள்ளார்.

priyanka nair - updatenews360

இந்த நிலையில் நடிகை பிரியங்கா தனது 8 வயது மகனுடன் இருக்கும் புகைபடத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Views: - 470

0

1