“சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா.” 50 வயசுலயும் ரசிகர்கள் ஏக்கத்தை தூண்டிய ஷோபனா .. Latest Video..!

Author: Rajesh
12 February 2022, 2:33 pm

நடிகை ஷோபனா, முதன் முதலில் மலையாளத்தில் ‘ஏப்ரல் 18’  எனும் படம் மூலம் நடிகையாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டார். இவர் தமிழில் ‘தளபதி’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

 இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாட்டியத்தில் தனது முழு வாழ்கையையும் அர்பணித்தார். இவர் கலைத்துறையில் சாதனை பெற்று  பத்மஸ்ரீ ,  “கலா ரத்னா” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னையில்  “கலார்ப்பனா” என்னும் நடனப்பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.       

நடிகை  ஷோபனா 50 வயதாகியும்  திருமணம் செய்து கொள்ளவில்லை, இருந்தும் இவர் ‘அனந்தநாராயணி’ என்பவரை தத்தெடுத்து வளர்ப்பு மகளாக்கி கொண்டார்.இந்நிலையில், இவர் தன்னுடைய போட்டோக்கள் , விடியோக்கள் ஆகியவற்றை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். தனது நடன பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பரதநாட்டிய பயிற்சி அளிக்கும் விடியோக்கள் , அவர்களுடன் சேர்த்து நடனமாடும் விடியோக்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

https://vimeo.com/676541262
  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்