உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!

Author: Vignesh
29 April 2024, 5:49 pm
dd
Quick Share

கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். 2017ல் விவ் கரைத்து பெற்ற டிடி தற்ப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!

தொடர்ந்து டிடி , திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்குவதில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்காக சென்ற டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் ஐயோ உங்களுக்கு என்ன ஆச்சு? கமெண்ட்ஸ் செய்து கேட்டு வந்தனர்.

மேலும் படிக்க: குஷ்புவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல.. 24-ஆண்டுக்கு பின் ரகசியத்தை வெளியிட்ட சுந்தர் சி..!

அன்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி எங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும். நாங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் எல்லா விஷயங்களிலும், அப்பா எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். ஸ்கூல் கட்டணம் கூட எங்களை தான் காட்ட சொல்லுவார். அந்த நேரத்தில், தன்னுடைய தந்தையிடம் தேடி நீங்கள் கவலைப்படாதீங்கப்பா நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அவர் சத்தியம் செய்த சில மணி நேரத்திலே அவரின் உயிர் பிரிந்துள்ளது.

Views: - 89

0

0