சமந்தா-நாகசைதன்யா விவாகரத்துக்கு காரணம் இதுதான்?.. நாகார்ஜுனா குடும்பத்தை பற்றிய உண்மையை உடைத்த பிரபல பாடகி..!

Author: Vignesh
16 December 2022, 2:30 pm
samantha - updatenews360
Quick Share

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha-updatenews360

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

samntha - updatenews360

தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

samantha - updatenews360

இந்நிலையில், நடிகை சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

samantha - updatenews360

மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.

NagachaitanyaSamantha_Updatenews360

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டில் இருந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.

இதுகுறித்து பிரபல பாடகியும் சமந்தாவின் நெருங்கிய தோழியுமான பாடகி சின்மயி சமந்தா விவாகரத்து குறித்து சமீபத்தில் சமூக வலைதளத்தில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

chinmayi-sripada-updatenews360

சின்மயி தான் சமந்தாவின் பல படங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில் சமந்தாவே தன் படங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தாவுக்கு உறுதுணையாக இருந்ததே கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான் என்றும், ஆனால் கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது தான் பெரிய பிரச்சனை. இதனால் குடும்பத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படும். இதன் ஒரு காரணம் தான் சமந்தாவின் விவாகரத்துக்கு பெரிய புள்ளியாக அமைந்துள்ளது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

Views: - 657

1

0