நிலவோடு சேர்ந்து… பனிக்காத்தும் வீச… மெய்மறந்த ரசிகர்கள்… கைதட்டி ரசித்த மகன்கள்.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
19 March 2022, 6:14 pm

சென்னை தீவுத்திடலில் இசையாணி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர்.

இதில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த தனுஷ் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‛நிலா அது வானத்தின் மேலே’ பாடலை யுவன், கார்த்திக் ராஜா உடன் இணைந்து தனுஷூம் பாடினார்.

அதோடு இந்த பாடலை தனது மகன்களை வைத்து தான் ஒரு தாலாட்டு பாடலாகவும் மாற்றி உள்ளதாக கூறி இளையராஜாவின் அனுமதியோடு இந்த பாடலின் மெட்டுக்கு ஏற்றபடி தான் உருவாக்கிய பாடல் வரிகள் கொண்டு தாலாட்டு பாடலாக பாடினார் தனுஷ். ‘கண்மூடிடு பூவிழி மானே… தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ ஆரிரோ.. நிலவோடு சேர்ந்து பனிக்காத்தும் வீச.. உன் காதில் இதமா தாலாட்டு பாட… கண்மூடிடு பூவிழி மானே தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ… ஆரிரோ… என்று மெலோடியாக பாடினார் தனுஷ். இந்த நிகழ்வு இளையராஜாவை மட்டுமின்றி அங்கிருந்த பார்வையாளர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷின் திறமையை இளையராஜா கைதட்டி பாராட்டினார்.

தனுஷ் மேடையில் பாடுவதை பார்த்த அவரது மகன்கள் யாத்ராவும் லிங்காவும் கைகளை தட்டியும் சிரித்தும் மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்காக தான் தனுஷ் இந்த பாடலை பாடியதாகவும், அவர் உள்ளுக்குள் ஐஸ்வர்யாவை நினைத்து உருகுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக இருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனையடுத்து மகன்கள் இருவரும் மாறி மாறி அப்பாவிடமும் அம்மாவிடமும் உள்ளனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்