இளையராஜாவால் அடி உதை வாங்கிய இயக்குனர் மிஸ்கின்… பிளாஷ்பேக் சம்பவம்!

Author: Shree
24 May 2023, 9:24 pm
ilayaraja mysskin
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்தவகையில் அண்மையில் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்ட அவர் தற்பெருமை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் கூட அவரை சென்று பார்க்கவில்லை. மலேசியா வாசுதேவன் அந்த ஏக்கத்தில் உயிர்விட்டார். அதோடு, இளையராஜா தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார்.

அதுமட்டும் அல்லாமல், இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மேலும் பல மேடைகளில் சக திரைத்துறை பிரபலங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி அவமதித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இளையராஜா குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் மிஸ்கின் தனது கடந்த கால அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.

ilayaraja 1

அதாவது, நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். எந்த அளவிற்கு என்று கேட்டால், நான் சிறுவயதில் கடை தெருவிற்கு செல்லும் போது அன்னக்கிளி படத்தின் பாடலை கேட்டதும் அங்கேயே நின்றுவிட்டேன். அது தான் நான் கேட்ட முதல் பாடல். அந்த பாடலில் நான் மெய்மறந்து திகைத்துப்போய்விட்டேன்.

அதன்பின் வளர்ந்ததும் பக்கத்துவீட்டில் இருப்பவரிடம் நிழல்கள் படத்தின் பாடல் கேசட்டை வாஙகி கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். இதனால் அவரது அம்மா கடுப்பாகி என்னை அடித்துவிட்டார். எனக்கு இளையராஜாவின் பாடல் மீது அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளது என அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

Views: - 269

0

0