பலான இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. பளார் பளார்னு அறைவிட்டு டார் டாராக கிழித்த பாக்யலட்சுமி நடிகை..!

Author: Vignesh
3 April 2023, 4:45 pm
Divya-Ganesh-updatenews360
Quick Share

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

Divya-Ganesh-updatenews360

இந்நிலையில், சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான “கேளடி கண்மணி” என்ற சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமாகி, சில சீரியல்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் j;wnghJ நடித்து வருகிறார்.

Divya-Ganesh-updatenews360

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திவ்யா கணேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் திவ்யா கணேஷ், தான் விமானத்தில் சென்னை வந்து கொண்டு இருந்த போது, அந்த நேரத்தில் தன் அருகில் இருந்த நபர் தன்னுடைய இடுப்பில் கைவைத்ததால், தனக்கு ரொம்ப கோபம் வந்து அப்போது தான் அந்த நபரை பளார் பளார்னு நான்கு அறைவிட்டேன் என்று திவ்யா கணேஷ் தெரிவித்துள்ளார்.

Views: - 654

1

1