திருமணமானவருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை..? வெளியான ரகசியம்..!

Author: Rajesh
30 April 2022, 6:41 pm
Quick Share

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரம் சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வரும் சமந்தா. சமந்தா கணவரை பிரிந்த தனியாக இருப்பதால், அவர் குறித்து அவதூறான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதாவது, நடிகை சமந்தா, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் ஹைத்ராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா பட தயாரிப்பாளர், ஊ சொல்றியா என்ற ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்பட்டது. ஹைத்ராபாத்தில் நடிகை சமந்தாவுக்கு புஷ்பா பட தயாரிப்பாளர் தனி வீடு வாங்கி கொடுத்து குடித்தனம் நடத்தி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அந்த தயாரிப்பாளர் திருமணம் ஆனவர், அவருடன் சமந்தா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திதான் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 1162

3

2