என் பொண்ணு பத்தி அவதூறு பேசிய நபர்… ஒரே வார்த்தையில் END போட்ட திரிஷாவின் அம்மா!

Author: Shree
17 April 2023, 9:28 pm
trisha
Quick Share

ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பியவர் ஏ எல் சூர்யா. இவர் நடிகை திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தது சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

al surya-updatenews360

இப்படி பல பிரபலங்கள் குறித்து கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சைக்கோ தனமா நடந்துக்கொள்ளும் ஏ எல் சூர்யா, தான் திரிஷாவை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் கூறி சர்ச்சை கிளப்பினார். மேலும் த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் விஜய் அவளுடன் நடிக்க கூடாது என்றெல்லாம் ஒருமையில் திட்டி பதிவிடுவார்.

மேலும், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், நானும் திரிஷாவும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை அதனால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. லியோ படத்தில் இருந்து அவளை வெளியேற்றுங்கள். திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக நடித்தால் ஒதப்பட்டு போவார் என கிறுகிறுக்க தனமாக பேசியுள்ளார். இது தளபதி ரசிகர்களையும், த்ரிஷா ரசிகர்களையும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

al-surya

தான் ஒரு இசையமைப்பாளர் என்றும் இயக்குனர் என்றும் கூறிக்கொண்டு வரும் ஏஎல் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார்.இதையடுத்து பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். அப்போ பத்மபிரியா இப்போ திரிஷா என தொடர்ந்து நடிகைகளை டார்ச்சர் செய்து வரும் ஏஎல் சூர்யா கைது செய்யப்படவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இப்படியான நேரத்தில் இந்த பிரச்சனைக்கு குறித்து திரிஷாவின் அம்மாவிடம் கேட்டதற்கு அவர், “அந்த நபர் அப்படி பேசுவதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். உண்மை என்னவென்று மக்கள் அனைவருக்கும் தெரியும். இதில் நாம் தலையிட்டால் அந்த விஷயம் மேற்க்கொண்டு பரபரப்பாகும்” என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 468

4

1