இது கொஞ்சம் Over தான்… 5,000 புடவை… அதுக்காகவே தனி வீடு – பொதுமேடையில் பெருமை பீத்திய ரக்ஷிதா!

Author: Shree
13 October 2023, 5:49 pm
rakshitha
Quick Share

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது.

அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலக்ஷ்மி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் சுமார் 5000 புடவைகள் இருக்கும் என்றும் புடவைக்காகவே நான் தனியாக ஒரு வீடே வைத்திருக்கிறேன் என்றும் அவர் பெருமை கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.

Views: - 352

4

0