பவதாரணி செத்ததுக்கு கூட கங்கை அமரன் வரல.. இளையராஜா செய்த நம்பிக்கை துரோகம் தான் காரணமாம்..!(வீடியோ)

Author: Vignesh
1 February 2024, 4:15 pm
Ilayaraja-And-Gangai-Amaran-Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

bhavatharani

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

bhavatharani

இந்நிலையில், பவதாரணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ilayaraja daughter death

இந்நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், இளையராஜாவைவிட கங்கை அமரனுக்கு தான் அதிகம் ஞானம் இருக்கிறது. கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தனது பெயரை போட்டுக் கொண்டார். இளையராஜா எல்லாரிடமும் தகராறு செய்வார்.

Ilayaraja-And-Gangai-Amaran-Updatenews360

அவர் மணிரத்தினம் மற்றும் கே பாலச்சந்தர் இருவருடன் தகராறு செய்ததால் தான் ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்கள். இளையராஜாவிற்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக கங்கை அமரன் இருந்தார். இருப்பினும், ஒரு முறை கங்கை அமரனை பார்த்து வெளியே போடா நாயே என்று இளையராஜா சொல்லிவிட்டார். அண்ணனுக்கு இவ்வளவு செய்தும் நம்மை மறந்துவிட்டாரே என்ற வருத்தம் கங்கைஅமரனிடம் தற்போது வரை இருக்கிறது. இந்த காரணத்தால் தான் பவதாரணி உயிரிழப்புக்கு கூட அவரால் வர முடியவில்லை. இனி அண்ணன் முகத்தில் முழிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதர் தெரிவித்துள்ளார்.

Views: - 386

0

0