25-வருடத்திற்கு பின் மீண்டும் அந்த விஷயத்தை செய்யபோகும் ஜோதிகா.. மும்பையில் செட்டிலானதும் இப்படி ஒரு முடிவா?..

Author: Vignesh
15 May 2023, 4:12 pm
jyothika-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.

காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், பாலிவுட்டில் 25 ஆண்டுகளுக்கு முன் டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக ஜோதிகா அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து 25 ஆண்டுக்கு பின் ஸ்ரீ பட்த்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது மற்றொரு இந்தி படம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து நடிக்க, இயக்குனர் விகாஸ் பால் என்பவர் இயக்க உள்ளாராம். இந்த படத்தில் கமிட்டாகி அடுத்தடுத்த இந்தி படங்களில் நடிகை ஜோதிகா நடிக்கவிருப்பதால் தான் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகியிருக்கிறாராம்.

Jyothika-updatenews360 3
Views: - 334

0

0