தனிமையில் அழைத்த காதலன்.. டார் டாராக கிழித்து புரட்டி எடுத்த விக்ரம் படம் நடிகை..!

Author: Vignesh
15 March 2024, 2:13 pm
kiran rathod - updatenews360
Quick Share

அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி, பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகைகளுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.

முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

kiran rathod - updatenews360

இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அதில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம் என்றும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

kiran rathod - updatenews360

மேலும், தன் காதலன் தன்னை விட்டு ஓடி விட்டான் என்றும், நான் என் காதலனை சித்திரவதை செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்ததான் என்னை அந்த விஷயம் மிகவும் பாதித்தது என்னை எப்படி அடிக்கலாம் என்ற எண்ணம் என் மனதிற்குள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முறை அவன் என்னை பார்க்க வேண்டும் என்று நேரில் வருமாறு என்னை இரவில் அழைத்தான். நான் சென்று அவனது ஆடைகளை கிழித்து அவனை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டுக் கொண்டே அவனது ஆடைகளை கிழித்தேன். அவன் ஆடையே இல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான் என்று கிரண் தெரிவித்துள்ளார்.

Views: - 70

0

0