இரவு தூங்கும் முன் ஆண் நண்பருடன்… அம்மாவிடம் கையும் களவுமாக மாட்டிய லட்சுமி மேனன்!

Author: Rajesh
31 January 2024, 7:30 pm
lakshmi menon
Quick Share

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

lakshmi menon - updatenewse360

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சின்ன வயசில் தவறு செய்து மாட்டிக்கொண்டீர்களா? என கேட்டதற்கு… ஆம், நான் பள்ளியில் படிக்கும் போது இரவு தூங்கச்செல்லும் முன் போர்வைபோர்த்திக்கொண்டு ஆண் நண்பருடன் போனில் பேசுவேன். ஒரு முறை என் அம்மா பார்த்துவிட்டு வெளுத்து வாங்கினார் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

Views: - 336

0

0