மகன்களுடன் chill-out செய்த நயன்தாரா – பட பூஜையுடன் புத்தாண்டை துவங்கிய விக்னேஷ் சிவன்!

Author: Rajesh
2 January 2024, 12:01 pm
nayanthara
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் நாப்கின் தொழிலை ஆரம்பித்தார்.

அவ்வப்போது மகன் மற்றும் குழந்தைகளுடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளுடன் chill-out செய்த கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அத்துடன் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் LIC படத்தை புத்தாண்டில் பூஜையுடன் ஆரம்பித்துள்ளார். அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு,

நூற்றுக்கணக்கான அடிகள் மத்தியில், மில்லியன் கணக்கான மிதிகள் 2023 இந்த இரண்டு சிறுவர்களின் கடினமான ஆனால் பயணிக்கக்கூடியதாக இருந்தது. மற்றும் என் மனைவியின் நிபந்தனையற்ற அன்புடன் அவர்கள் இந்த குழந்தைகளின் சிரிப்பு ஒலி இயல்புநிலை இசையுடன் அன்பையும் நேர்மறையையும் கொண்டு வீட்டை மிகவும் இதமாக மாற்றினர். இதனால் எனது லட்சிய இலக்குகளை நோக்கி முன்னேறவும் கடினமாக உழைக்கவும் அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது. என கூறி பதிவிட்டுள்ளார்.

Views: - 187

0

0