சினிமா இல்லனாலும் நான் சீன் காட்டுவேன்.. பிசினஸில் கல்லாகட்டும் நயன்தாரா!

Author: Shree
24 April 2023, 9:59 pm
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்ச அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

நயன்தாரா சினிமாவையும் தாண்டி நிறைய தொழில் செய்து கோடி கணக்கில் சம்பாதிக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் ஆனதும் முதலில் துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலில் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். பின்னர் “தி லிப் பாம் கம்பெனி” ஒன்றை நடத்தி வருகிறார்.
அதன் பின்னர் இந்தியாவில் மிகப் பிரபலமான “சாய் வாலே” என்ற தேநீர் கடையில் முதலீடு செய்து உள்ளார். மேலும் இறைச்சி சம்பந்தமான ஒரு தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார். தொழிலில் மட்டும் ஒரு வருடத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறராம் நயன்தாரா. இப்படியே சினிமாவை விட்டுவிட்டாலும் அவருக்கு தொழில் காலத்திற்கு சோறு போடும்.

Views: - 690

7

3