அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்…. நடுரோட்டில் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்!

Author: Shree
10 October 2023, 11:33 am
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் நயன்தாரா கடைசியாக ஜவான் படத்தில் நடித்தார். இந்நிலையில் திரைப்படங்கள் முடித்த கொஞ்சம் கேப்பில் குடும்பத்தோடு என்ஜாய் செய்து வருகிறார் நயன்தாரா. தற்போது விக்னேஷ் சிவன் நடுரோட்டில் நயன்தாராவுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு “அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்” என கேப்ஷன் கொடுத்து காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Views: - 290

0

2