வளர்த்துவிட்ட பருப்பு இங்க வேகாதாம் பாலிவுட்டிற்கு போய் தான் வேகுமாம்… நயன்தாராவால் கோபமடைந்த கோலிவுட்!

Author: Shree
17 August 2023, 4:37 pm
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இது பாலிவுட்டின் அறிமுக படம் என்பதால் அவர்கள் கேட்கும்படியெல்லாம் நடித்து கொடுக்கிறாராம்.

குறிப்பாக ரொமான்ஸில் தாராளம் காட்டி நடித்துள்ளார். ஓவர், நெருக்கம் , எல்லை மீறிய ரொமான்ஸ் என ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்துள்ள பாடல் ஒன்று வெளியாகி செம ஷாக் கொடுத்தது. இதுவரை தமிழ் ஹீரோக்களுடன் கூட அப்படி ஒரு நெருக்கம் காட்டவில்லை என்றால் பாருங்க. எல்லாத்துக்கும் காரணம் பாலிவுட்டில் மார்க்கெட் பிடிக்க தானாம். இதனால் கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை சந்தேக கண்ணோடு பாதுகாத்து வருவதாக செய்திகள் கூறுகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நடிகை நயன்தாரா பல வருடங்களாக கடைபிடித்து வந்த தனது கொள்கையை ஜவான் படத்தில் தகர்த்தெறிய உள்ளாராம். இப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய திட்டமிட்டிருக்கும் படக்குழு இதில் நயன்தாராவையும் கலந்துக்கொள்ள சம்மதம் வங்கியுள்ளார்களாம். ஷாருக்கான் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்பதால் நயன்தாராவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால், அது உண்மை இல்லை. நயன்தாரா பாலிவுட்டில் நல்ல ஸ்ட்ராங்கான இடத்தை பிடிக்க திட்டமிட்டு தான் இதற்கெல்லாம் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இப்படி செய்தால் பாலிவுட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிடும் என பக்காவாக பிளான் போட்டுவிட்டாராம். இதை கேட்டு செம காண்டாகிவிட்டதாம் கோலிவுட். பின்ன என்னங்க வளர்த்துவிட்ட இடத்துல இதெல்லாம் பண்ணாமல் வசதியும் மதிப்பும் அதிகம் நிறைத்ததால் பாலிவுட்டில் மட்டும் பண்ணுவாங்கலா? என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

Views: - 335

0

0