நடுத்தெருவுக்கு வந்த நீலிமா ராணி.. அந்த மாதிரி சமயத்துல, அப்பா செய்த அதிர்ச்சி செயல்..!

Author: Vignesh
7 December 2023, 10:08 am
neelima rani
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீலிமா தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் பற்றி பேசி உள்ளார். தான் சீரியல்களில் நடித்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்த சமயத்தில், அப்பாவிடம் தான் அந்த பணத்தை எல்லாம் கொடுத்து இருந்ததாகவும், ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்தத்தையும் இழந்துவிட்டார். ஒரு காலகட்டத்தில் கையில் எதுவும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். அதன் பின் தைரியமாக வாடகை வீட்டில் குடியேறி வைராக்கியத்துடன் சம்பாதித்து தான் தற்போது இருக்கும் வீட்டை வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

Views: - 184

0

0