ஆபாசப்பட வழக்கில் சிக்கிய கணவர்… விவாகரத்து செய்த ஷில்பா ஷெட்டி – பரபரப்பில் பாலிவுட்!

Author: Shree
21 October 2023, 8:10 pm
shilpa shetty
Quick Share

என்றும் 16 என்று சொல்லக் கூடிய அளவுக்கு, தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட இந்த பாலிவுட் நடிகை இன்றும் அதே இளமை மாறா தோற்றத்தில் ஆரோக்கியமாகக் காட்சியளிக்கிறார்! அவர் தான் ஷில்பா ஷெட்டி.

இவர் 2009ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தொழிலதிபரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். இதனிடையே ஆபாச பட வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். இவர் மாடல் அழகிகளை வரவைத்து அவர்களை வைத்து ஆபாச படமெடுத்து அந்த வீடியோவை பணத்திற்கு விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குற்றவாளியாக கருதப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்தும் கணவருடன் வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டி தற்போது தனது கணவரை திடீரென பிரிந்துவிட்டார். இது குறித்து பதிவியுள்ள ராஜ் குந்தாரா “நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டு இருந்தார். இந்த விஷயம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 293

0

0