EMOTIONAL காட்டி படத்தை ஓட வைக்க முடியாது… அயலான் பட இயக்குநரின் குமுறல்!

Author: Vignesh
3 November 2023, 2:42 pm
ayalaan updatenews360
Quick Share

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில் படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். இப்படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கி உள்ளனர்.

ayalaan-updatenews360

இயக்குனர் ரவிக்குமார் அயலான் குறித்து பேட்டி அளித்துள்ளார். படத்திற்காகப் பட்ட கஷ்டங்கள் பின்னணி வேலைகள் எல்லாம் மக்களுக்கு தேவை இல்லை. படம் சுவாரசியமாக இருக்கிறதா, இல்லையா படம் மக்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பது தான் முக்கியம். அப்படி படம் மக்களுக்கு பிடித்து விட்டால் அப்போது, நாங்கள் பட்ட கஷ்டங்களையும் எங்களுடைய உழைப்பையும் பற்றி பேசலாம்.

sivakarthikeyan-updatenews360

எங்களுக்கு படம் எடுக்க சில காலங்கள் ஆகிவிட்டது என்று கூறி கருணை காட்டி படத்தை ஓட வைக்க முடியாது. நன்றாகவும், திறமையாகவும் வேலை செய்திருந்தால் கண்டிப்பாக படம் ஓடும். அப்படி நன்றாக வேலை செய்து இருக்கிறோம் என்று, நாங்கள் நம்புகிறோம் என பேசி இருந்தார் இயக்குனர் ரவிக்குமார் இவருடைய இந்த அதிரடியான பேச்சு தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Views: - 242

0

0