விரைவில் அம்மாவாகப்போகும் சமந்தா… ரசிகர்கள் வாழ்த்து!

Author: Shree
26 November 2023, 5:36 pm
samantha
Quick Share

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வருகிறார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்திக்கொண்டே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் சமந்தா விரைவில் அம்மாவாக போவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆம், சமந்தாவுக்கு இரண்டாம் திருமணம் செய்வதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். ஆனால், குழந்தை வேண்டும் என ஆசைப்படும் சமந்தா, தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளாராம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Views: - 351

0

0