10 நாளில் டெலிவரி… அர்னவ் இன்னும் கண்டுக்கல – குமுறி அழுத திவ்யா – வீடியோ!

Author: Shree
17 March 2023, 4:56 pm
arnav
Quick Share

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள்

அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். இன்னும் 10 நாளில் டெலிரி ஆகவுள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் அர்னவ் திவ்யாவை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு சீரியல் நடிகையை காதலித்து வருகிறார்.

இதையடுத்து திவ்யா அர்னவ்ர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், என் நண்பர்கள் எல்லோரும், அவன் உன்னை ஏமாத்தி விட்டு போயிட்டான். உனக்கு எதற்கு இந்த குழந்தை, வேண்டாம் என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். கடவுள் கொடுத்த இந்த குழந்தையை நன்றாக பெற்று வளர்ப்பேன். பத்து பதினைந்து நாட்களில் குழந்தை பிறந்து விடும்
பண கஷ்டத்திற்காக இன்னும் நான் ஷூட்டிங் செல்கிறேன் என்றார்.

எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என அவனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று கண்ணீர் விட்டு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள், அர்னாவ் நல்லா அம்மாவுக்கு பிறந்து இருக்க மாட்டான். இவ்வளவு அழகான, பொருமையான மனைவி கூட வாழ அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை . கடவுள் அவனை தண்டிப்பார். மகிழ்ச்சியாக இருங்கள் தாயே என ஆறுதல் கூறியுள்ளனர்.

Views: - 425

0

0