காமெடி நடிகையின் வாழ்க்கையை நாசம் செய்ததால் தான் இப்ப அனுபவிக்கிறீங்க.. வடிவேலுவை வசை பாடிய ஷகீலா!

Author: Vignesh
31 July 2023, 7:00 pm
Quick Share

தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.

7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.

என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

prema priya-updatenews360

அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக ஷகீலாவின் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும், அவரால் தான் தன் வாழ்க்கையே வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து, ஷகிலா வடிவேலுவை இப்படி பேசிட்டு அவரிடமிருந்து மிரட்டல் வந்ததா என்று கேட்டுள்ளார்.

அதற்கு, ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடணும்னு சொன்னாங்க ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் என பிரேம பிரியா தெரிவித்து இருந்தார். மேலும், இதை ஏன் முன்னாடியே சொல்லல என்று சகிலா கேட்டதற்கு, முன்னாடி மீடியா இதுபோன்று இல்லை. எனக்கும் வடிவேலுக்கும் மீடு பிரச்சினை இல்லையே என்று தெரிவித்துள்ளார்.

sakila-updatenews360

இப்ப நீ சொல்றது மீ டு பிரச்சனை இல்லை என்று சொல்லலாம். வடிவேலுவை எனக்கு தெரியும் அவர் என்ன எதிர்பார்ப்பார் என்று எனக்கு தெரியும் என்று ஷகீலா தெரிவித்து இருக்கிறார். மேலும், ஷகிலா வடிவேலு உங்களை ரொம்ப நல்லா தெரியும் இதுபோல் நிறைய பேர் உங்களை பற்றி சொல்கிறார்கள் நீங்கள் எப்படி இந்த இடத்துக்கு வந்தீங்கன்னு தெரியும். நடிக்க முடியாமல் போக சின்ன சின்ன நடிகர்களை வளர விடாமல் தடுத்ததற்கு அனுபவிக்கிறீங்க என்று ஷகிலாவும் தன் பங்குக்கு தெரிவித்துள்ளார்.

Views: - 543

4

0