கூட்ட நெரிசலில் நைசா அந்த இடத்தில் கைவிட்ட மர்ம நபர் – நிகழ்ச்சியை விட்டு பாதியிலே ஓடிய தமன்னா!

Author: Shree
25 June 2023, 1:49 pm
tamanna
Quick Share

பால் பப்பாளி போன்று பளபளன்னு இருக்கும் வெள்ளை மேனியை வைத்து சினிமாவில் அறைமுகம் ஆகி வெகு சீக்கிரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து டாப் ஹீரோயின் இடத்தை பிடித்தவர் தமன்னா. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார்.

தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி பல மொழிப் படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றுவிட்டார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானாலும் கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.

கதை தேர்வில் மிகவும் கவனம் கொண்டு எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்த தமன்னா தற்போது ஆபாச வெப் தொடர்களில் நடித்து பேரதிர்ச்சி கொடுத்துவிட்டார். ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோர்ஸ் போன்ற ஆபாச தொடர்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில் கேரளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்த ரசிகர்கள் தமன்னாவை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் தமன்னாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தமன்னா ஆவேசமாக கத்தி அங்கு இருந்து கிளம்பிவிட்டாராம். ஆபாச தொடரில் நடித்ததால் தான் தமன்னாவை இப்படி பார்க்கிறார்கள் என நெட்சன்ஸ் விமர்சித்துள்ளனர்.

Views: - 635

24

10