கேப் விடாமல் பண்ணுவேன்… எவனும் என்னை ஒன்னும் பண்ணமுடியாது- வனிதாவின் துணிச்சல் பேச்சு!

Author: Rajesh
20 January 2024, 5:43 pm
vanitha
Quick Share

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha_updatenews360

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதாவிடம் அவரின் தொடர் திருமணம் குறித்து கேட்டதற்கு, இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டேன். முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து செய்தேன். அதற்கான காரணம், வெளியில் சொல்லமுடியாது. அது என் தனிப்பட்ட விஷயம்.

வேண்டுமானால் தொடர்ந்து இல்லீகலா கல்யாணம் பண்ணிட்டே இருக்க வேண்டியது தான், அதற்கெல்லாம் யாரும் உள்ள தூக்கி போடமாட்டாங்க. மூன்றாவது கல்யாணம் இனிமேல் தான் பண்ணுவேன், திடீர்னு கூட பண்ணுவேன். ஆனால், உண்மையில் எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்கொள்வதில் விருப்பமே இல்லை. இப்போதைக்கு நான் சினிமாவை தான் காதலிக்கிறேன் என மனதில் பட்டத்தை பளீச்சுன்னு கூறினார் வனிதா.

Views: - 278

0

0