இந்த இரண்டு விஷயங்களை செய்தால் போதும்… இரவில் படுத்த உடனே தூங்கி விடலாம்..!!!

Author: Hemalatha Ramkumar
17 May 2022, 10:00 am
Quick Share

சிறந்த முயற்சிகளை எடுத்தபோதிலும், தூக்கம் பலருக்கு ஒரு கடினமான காரியமாகவே உள்ளது. போதுமான தூக்கம் இல்லாதது மந்தம், மனநிலை மாற்றங்கள், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

தூக்கப் பிரச்சினைகள் அதிகரித்த மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. இது இருதயக் கோளாறுகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் தூங்க முடியாமல் தவிப்பவராக இருந்தால் அல்லது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த முயற்சிப்பவராக இருந்தால், இரண்டு வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெறலாம். அது என்ன மாற்றம் என்பதை இப்போது பார்க்கலாம்.

* முதலில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது தூக்கத்தின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால், நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள் .மேலும் படுக்கையில் படுத்தவுடனே தூங்கி விடலாம்.

* நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் நீண்ட தூக்கத்திற்கு பதிலாக குறுகிய தூக்கத்தை எடுக்க வேண்டும். பலர் பகலில் தூங்குகிறார்கள், குறிப்பாக அது நீண்டதாக இருந்தால் சிறிய அளவிலான தூக்கத்தை பெற முயற்சிக்கவும். ஆனால் இரவில் நீண்ட மணிநேரம் தூங்குவதற்கும், பகலில் சிறிய தூக்கத்தை வைத்திருப்பது முக்கியம். இவ்வாறு செய்யும் போது, இரவில் தூங்குவது உங்களுக்கு கடினமாக இருக்காது.

Views: - 593

0

0