தேர்தல் பத்திரம் மூலம் கோடிகளை குவித்த பாஜக… அள்ளிக் கொடுத்த நிறுவனங்களில் முதலிடத்தில் மார்ட்டின்..!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 11:25 am
Quick Share

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நிதி பெற்ற அரசியல் கட்சிகளுக்கான விபரம் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையில் பல்வேறு மதிப்புகளி தேர்தல் பத்திரங்கள் அங்கீரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கலாம். இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்தது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றவர்களின் விபரங்களை இணையதளத்திலும் உச்சநீதிமன்றம் வெளியிடச் செய்தது.

தேர்தல் பத்திரம் அதிகம் வாங்கிய டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்

ப்யூச்சர் கேமிங் மற்றும ஹோட்டல் சர்வீஸ் – ரூ.1,368 கோடி
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ஃராஸ்ட்ரக்சர் லிமிடெட் – ரூ.821 கோடி
குயிக் சப்ளை செயின் லிமிடெட் – 410 கோடி
ஹால்டியா எனர்ஜி லிமிடெட் – ரூ.377 கோடி
வேதாந்தா லிமிடெட் – 376 கோடி
எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ரூ.225 கோடி
கெவெண்டர் ஃபுட்பார்க் இன்ப்ரா லிமிடெட் – ரூ.195 கோடி
மதன்லால் லிமிடெட் – ரூ.186 கோடி
பாரதி ஏர்டெல் குழும் – ரூ.183 கோடி
யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் -ரூ.162 கோடி

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நிதி விபரம்

பாஜக – ரூ.6,060.50 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,609.50 கோடி
காங்கிரஸ் – ரூ.1,421.90 கோடி
பாரத் ராஷ்ட்ர சமிதி – 1,214.70 கோடி
பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி
திமுக – ரூ.639 கோடி
அதிமுக – ரூ.6.10 கோடி

2019 முதல் 2024 பிப்ரவரி வரையில் 22,030 பத்திரங்கள் ரொக்கமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Views: - 211

0

0