தடை செய்யப்பட்ட பிறகும் ரகசியமாக செயல்படுகிறதா PFI…? கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 2:08 pm
Quick Share

கேரளா ; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ரகசியமாக செயல்படுவாக தகவல் வெளியான நிலையில், கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பரில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும், நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில், பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் கேரள மாநிலம் முழுவதும் 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் தடையை மீறி இந்த அமைப்பு ரகசியமாக தனது செயல்பாடுகளை தொடர்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Views: - 295

0

0